இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 9 தமிழக மீனவர்கள் இன்றைய தினம் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தமது உத்தியோகப்பூர்வ டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களையும், அவர்களது 79 படகுகளையும்விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.