ஹைரியா நகர் பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு சந்தேக நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது விற்பனை செய்வதற்கு வைத்திருந்த 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்துள்ளதுடன் இவர்களை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.