உஸ்பெகிஸ்தானின் விமான சேவை நிறுவனமான உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸ் ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இன்று (09) தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது.
இன்று முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் உஸ்பெகிஸ்தானுக்கும் மத்தளவிற்கும் இடையில் வாராந்திர விமானத்தை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸின் சேவை மூலம் இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.