follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுதொடர் பணிப்புறக்கணிப்பில் இராமேஸ்வரம் மீனவர்கள்!

தொடர் பணிப்புறக்கணிப்பில் இராமேஸ்வரம் மீனவர்கள்!

Published on

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களையும்,  படகுகளையும் விடுவிக்குமாறு கோரி, இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில், இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மீனவர்களின் இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக 800 க்கும் மேற்பட்ட படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 10 கோடி ரூபா வருமானம் இல்லாது போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் 11 ஆம் திகதி இராமேஸ்வரம் ரயில் நிலைய வளாகத்தில் மீனவர்கள் எதிர்ப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.2,000 கொடுக்க வேண்டும்”

தற்போதைய ஜனாதிபதி அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும்...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்கள் கொண்ட அணிக்கு சரித் அசலங்க...

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு புகையிரத சேவைகள் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இன்று (18) நடத்தப்படவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று (18)...