அடுத்த மாதம் முதல் மாதாந்தம் 3 மில்லியன் மெட்ரிக் தொன் சீமெந்தை சந்தைக்கு விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்மூலம் தற்போது காணப்படும் சீமெந்துக்கான தட்டுப்பாடு எதிர்காலத்தில் குறைவடையும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சீமெந்து விலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கையையும் நிறுவனங்கள் தம்மிடம் முன்வைக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மேலும் தெரிவித்துள்ளார்.