follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுஇலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய இஸ்ரேல்

இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய இஸ்ரேல்

Published on

சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான இஸ்ரேலிய முகவரமைப்பின் ஊடாக இஸ்ரேல் அரசாங்கம் இலங்கைக்கு வென்டிலேட்டர்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பல்ஸ் ஒக்சிமீட்டர்கள் உள்ளிட்ட பொருட்களை நன்கொடையாக வழங்கியதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் இஸ்ரேல் அரசாங்கத்தின் நன்கொடை கையளிக்கப்பட்டது.

இஸ்ரேலியத் தூதுவர் நவோர் கிலோன் இந்த நன்கொடையை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவிடம் கையளித்தார். இவ்விழாவில் இஸ்ரேலின் தூதுவர் விக்கி விக்கிரமதுங்கவும் கலந்து கொண்டார்.

இலங்கையும் இஸ்ரேலும் நெருங்கிய நட்புறவையும் ஒத்துழைப்பையும் கொண்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்டத்தில் இருந்து, இஸ்ரேல் அரசாங்கம் இலங்கைக்கு பெறுமதி வாய்ந்த கோவிட்-19 தொடர்பான உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...