follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதரமற்ற சப்பாத்துக்களுக்கு 8 லட்சம் ரூபா!

தரமற்ற சப்பாத்துக்களுக்கு 8 லட்சம் ரூபா!

Published on

தரமற்ற சப்பாத்துக்களைக் கொள்வனவு செய்ய வீதி அபிவிருத்தி அதிகார சபை 852,100 ரூபாவை செலுத்தியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு 734 ஜோடி சப்பாத்துக்களை கொள்வனவு செய்ய 37 லட்ச ரூபாவை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், விநியோகஸ்தர் சப்பாத்துக்களுக்கு தேவையான விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்யவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உள்ளக கணக்காய்வுப் பிரிவு மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் ஆகியனவும் இந்த சப்பாத்துக்கள் குறிப்பீடுகளுக்கு இணங்கவில்லை என தமது அறிக்கைகளில் தெரிவித்திருந்தன.

எனினும் சப்பாத்துக்கள் கொள்வனவுக்கு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மறுப்பு தெரிவிக்காமை குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் பலராலும் பேசப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இந்த சப்பாத்துக் கொள்வனவு குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...