சுயதொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகிய துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் வைத்து நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சுற்றி, சீமெந்து மற்றும் உருக்கு உற்பத்தி உட்பட பத்து புதிய கைத்தொழில் தொழிற்சாலைகளைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.