follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு பேராயர் விஜயம்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு பேராயர் விஜயம்

Published on

பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தின் மீதான குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய  சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பில் விசாரிப்பதற்காக கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு விஜயம் செய்தார்.

பொரளை அனைத்து புனிதர் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் பிரதான சந்தேகநபராக ஓய்வு பெற்ற வைத்திய அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், முனி என்ற சந்தேக நபரின் இருப்பிடம் குறித்து விசாரிப்பதற்காக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பல ஆயர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு இன்று வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...