இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, கறுப்புச் சந்தையில் இருந்து பெறப்பட்ட டாலர்களைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கியதாக, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, தெரிவித்த கருது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது, மோதலின் போது, சீனாவில் உள்ள NORINCO நிறுவனத்திடம் இருந்து கடனிற்கு இலங்கை ஆயுதங்களை கொள்வனவு செய்தது.
பல பீப்பாய்கள் Czechoslovakia வில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டது , மேலும் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் போது சீனாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதில் இலங்கைக்கு பிரச்சினை ஏற்பட்ட போது, அந்த காலப்பகுதியில் இலங்கை பாகிஸ்தானிடம் இருந்து 65 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும் வடகொரியாவுக்கும் ஆயுதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.