follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவடகொரியாவுக்கும் ஆயுதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை - சரத் பொன்சேகா

வடகொரியாவுக்கும் ஆயுதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – சரத் பொன்சேகா

Published on

இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, ​​கறுப்புச் சந்தையில் இருந்து பெறப்பட்ட டாலர்களைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கியதாக, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, தெரிவித்த கருது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது, ​​மோதலின் போது, ​​சீனாவில் உள்ள NORINCO நிறுவனத்திடம் இருந்து கடனிற்கு இலங்கை ஆயுதங்களை கொள்வனவு செய்தது.

பல பீப்பாய்கள் Czechoslovakia வில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டது , மேலும் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் போது சீனாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதில் இலங்கைக்கு பிரச்சினை ஏற்பட்ட போது, ​​அந்த காலப்பகுதியில் இலங்கை பாகிஸ்தானிடம் இருந்து 65 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும் வடகொரியாவுக்கும் ஆயுதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...