follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுசிசிடி விசாரணைகளை மேற்பார்வை செய்ய திலீப பீரிஸ் நியமிப்பு

சிசிடி விசாரணைகளை மேற்பார்வை செய்ய திலீப பீரிஸ் நியமிப்பு

Published on

கொழும்பு – பொரளை அனைத்து பரிசுத்தவான்கள் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை மேற்பார்வை செய்வதற்காக, சிரேஷ்ட பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸை சட்டமா அதிபர் நியமித்துள்ளார்.

பொரளை அனைத்து பரிசுத்தவான்களின் தேவாலயத்திலிருந்து கடந்த ஜனவரி 11 ஆம் திகதி கைக்குண்டொன்று மீடகப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர்  சம்பவம் தொடர்பில் இதுவரை 7 பேரை கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்த விசாரணைகளின் முன்னேற்றத்தை, நாளையதினம்  மன்றுக்கு அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு கடந்த வழக்கு விசாரணையின்போது உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...