கொழும்பு – பொரளை அனைத்து பரிசுத்தவான்கள் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை மேற்பார்வை செய்வதற்காக, சிரேஷ்ட பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸை சட்டமா அதிபர் நியமித்துள்ளார்.
பொரளை அனைத்து பரிசுத்தவான்களின் தேவாலயத்திலிருந்து கடந்த ஜனவரி 11 ஆம் திகதி கைக்குண்டொன்று மீடகப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பில் இதுவரை 7 பேரை கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் குறித்த விசாரணைகளின் முன்னேற்றத்தை, நாளையதினம் மன்றுக்கு அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு கடந்த வழக்கு விசாரணையின்போது உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .