ஓய்வுபெற்ற ரயில்வே கட்டுப்பாட்டாளர்களை, ஒப்பந்த அடிப்படையில் மீள சேவைக்கு அழைக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் டி.ஜி. செனவிரத்ன தெரிவித்தார்.
ரயில்வே கட்டுப்பாட்டாளர்களுக்கான பற்றாக்குறை காரணமாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஏற்கனவே அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ரயில்வே கட்டுப்பாட்டாளர்களுக்கான பற்றாக்குறை காரணமாக தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படுவதை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.