follow the truth

follow the truth

October, 19, 2024
Homeஉள்நாடுவெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற ஐவர் கைது

வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற ஐவர் கைது

Published on

சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு, வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, டுபாய் நோக்கி நேற்று (29) பயணிக்க முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில், 95000 அமெரிக்க டொலர், 18000 யூரோ, 37000 சவூதி ரியால் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெற்கு அதிவேக வீதியில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலியில் இருந்து கொழும்பு செல்லும் வீதியில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனம் ஒன்றில்...

மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல் – இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக...

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் – புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு

புறக்கோட்டையில் உள்ள அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் நேற்று நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது பல...