HomeTop newsஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமாலுக்கு உபாதை

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமாலுக்கு உபாதை

காலி மைதானத்தில் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று (18), களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் உபாதைக்கு உள்ளானார்.

எல்லைக் கோட்டிற்கு அருகில் நான்கோட்டத்தை (four) தடுக்க முயன்ற போது, அவரது வலது தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த உடனடியாக மைதானத்திலேயே அணியின் உடலியக்க நிபுணர் (physiotherapist) அவரைப் பரிசோதித்ததுடன், அதனைத் தொடர்ந்து மேலதிக பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் (Scan) பரிசோதனைக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கேன் அறிக்கைகள் கிடைத்த பின்னரே அவரது உபாதையின் நிலைமை குறித்து மேலதிக தகவல்கள் வெளிப்படுத்தப்படும் என சிறிலங்கா கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular