follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகிராம உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல்

கிராம உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல்

Published on

2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக களக் கணக்கிட்டு காலத்தில் கிராம உத்தியோகத்தர் இடமாற்றங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலக நாட்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் ஜூன் 15 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

ஒழுக்காற்று காரணங்கள் போன்ற அவசர மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தவிர, கிராம உத்தியோகத்தர்களை உரிய காலத்தில் அல்லது வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இடமாற்றம் செய்யக் கூடாது என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் கிராம உத்தியோகத்தர்கள் காலை வேளைகளில் அலுவலகங்களில் தங்கியிருக்க வேண்டும் எனவும் எஞ்சிய நாட்களை களப்பணிகளுக்காக விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுநோய் காரணமாக 2022 வாக்காளர் பட்டியலுக்கான பி.சி. படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்காமலிருக்க தேர்தல் ஆணையம் சமீபத்தில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...