பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நோக்கி பயணிக்கும் பக்தர்களுக்காக விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க இலங்கை ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த மாதம் 29ஆம் திகதி பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நோக்கி பயணிக்கும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக தற்போது இயக்கப்படும் ரயில்களுக்கு மேலதிகமாக, பின்வரும் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026/06/27ஆம் திகதி முதல் 2026/06/30ஆம் திகதி வரை இந்த ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

