இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு நேபாள அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்திய மாம்பழங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை எல்லைப் பகுதிகளில் பரிசோதித்து தனிமைப்படுத்துவதற்கான போதிய வசதிகள் இல்லாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தடை, இந்திய மாம்பழங்களின் கடுமையான போட்டியால் பாதிக்கப்பட்டு வந்த நேபாளத்தின் உள்நாட்டு மாம்பழ விவசாயிகளுக்கு பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், நாட்டின் மொத்த தேவையை பூர்த்தி செய்ய உள்நாட்டு மாம்பழ உற்பத்தி மட்டும் போதுமானதாக இருக்காது என சந்தை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன. இதன் காரணமாக சந்தையில் மாம்பழ வரத்து குறைந்து, விலைகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
