Homeஉலகம்பாகிஸ்தானில் தனியார் மயமாகும் கல்வி

பாகிஸ்தானில் தனியார் மயமாகும் கல்வி

பாகிஸ்தானில் பொதுக் கல்வி நிறுவனங்களை அதிரடியாகத் தனியார்மயமாக்கி வரும் அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக, அங்குள்ள முன்னணி ஆசிரியர் சங்கங்களும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளும் மிகக் கடுமையான எதிர்ப்பைக் கிளப்பியுள்ளன.

அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த பொதுக் கல்வி அமைப்பும் முற்றிலும் சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ராவல்பிண்டியில் நடைபெற்ற அவசரப் பத்திரிகையாளர் சந்திப்பில், பஞ்சாப் ஆசிரியர் சங்கம், கல்வியாளர்கள் சங்கம் மற்றும் கல்வி ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் முக்கியப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, இந்தத் தனியார்மயமாக்கல் திட்டத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்களைப் பொதுவெளியில் உடைத்துள்ளனர்.

அரசு-தனியார் கூட்டுமுறை என்ற போர்வையில், கடந்த ஓராண்டில் மட்டும் பாகிஸ்தான் அரசு சுமார் 15,000 அரசுப் பள்ளிகளைத் தனியார் நிறுவனங்களின் நிர்வாகத்திடம் தாரை வார்த்துள்ளது.

இந்தத் திடீர் அவுட்சோர்சிங் நடவடிக்கையின் காரணமாக, கல்வித்துறையில் இருந்த சுமார் 50,000 நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்பட்டுள்ளதாகச் சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அனுபவம் வாய்ந்த நிரந்தர ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு, அந்த இடங்கள் தற்காலிக ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு நிரப்பப்படுவதால் ஒட்டுமொத்த பொதுக் கல்வியின் தரம் படுபாதாளத்திற்குச் சரிந்துள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளை ஏலத்திற்கு எடுத்து நடத்தும் தனியார் நிறுவனங்கள், பட்டதாரிகளையும் எம்பில் (MPhil) போன்ற உயர் கல்வி முடித்த இளைஞர்களையும் மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்திப் பெரும் சுரண்டலில் ஈடுபட்டு வருகின்றன.

உயர் கல்வி தகுதி கொண்ட இந்த ஆசிரியர்களுக்கு மாதத்திற்கு வெறும் 8,000 முதல் 10,000 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசின் தற்போதைய சட்டப்படி, ஒரு படிக்காத சாதாரணத் தொழிலாளிக்குக் கூட குறைந்தபட்ச மாத ஊதியமாக சுமார் ரூ. 45,000 வழங்கப்பட வேண்டும்.

ஆனால், எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலியில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே வழங்கப்படுவது பெரும் அவலமாகப் பார்க்கப்படுகிறது.

தனியார் நிர்வாகங்களின் கீழ் வேலை செய்யும் ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கோடை விடுமுறை நாட்களில் ஒரு பைசா கூட சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஒரு பள்ளியை வழிநடத்தும் தலைமை ஆசிரியர்களுக்குக் கூட வெறும் 12,000 ரூபாய் தான் மாதச் சம்பளமாகக் கிடைக்கிறது. இது ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தின் Dignity எனப்படும் கண்ணியத்தையே குலைக்கும் செயல் என தொழிற்சங்கங்கள் கொந்தளித்துள்ளன.

அரசு மிகுந்த விளம்பரத்துடன் கொண்டு வந்துள்ள ‘ஸ்கூல்ஸ் ஆஃப் எமினென்ஸ்’ என்ற புதிய கல்வித் திட்டமும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular