ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கலாநிதி சி.வை.பி. ராம் கட்சியில் வகித்த அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளார்.
வடகொழும்பு பிரதான அமைப்பாளர், ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் கட்சியின் உதவிச் செயலாளர் ஆகிய பதவிகளையே அவர் துறந்துள்ளார்.
இந்த தகவலை மலையக குருவியிடம் கலாநிதி சிவைபி ராம் உறுதிப்படுத்தினார்.
தனது இராஜினாமா கடிதம் கட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
சிவைபி ராமின் மகன் டானியல் ராம், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான பதவி வகிக்கின்றார்.
கொழும்பு மாநகரசபையன் வரவு- செலவுத் திட்ட வாக்கெடுப்பு நாளில் அவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் அவரை கட்சி இடைநிறுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே சிவைபி ராம் தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் பதவி விலகுவதாகவும், தவிர்க்க முடியாத காரணத்தாலேயே தனது மகன் சபைக்கு செல்லவில்லை எனவும் ராம் கூறினார்.
கொழும்பு மாவட்டத்தில் முக்கிய தமிழ் அரசியல்வாதிகளில் ராமும் ஒருவர். அவர் மேல்மாகாணசபை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
