மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு முழு ஆதரவு வழங்கப்படும் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.
