follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுதேசிய கட்டமைப்புடன் தனியார் மின்பிறப்பாக்கிகளை இணைக்க திட்டம்

தேசிய கட்டமைப்புடன் தனியார் மின்பிறப்பாக்கிகளை இணைக்க திட்டம்

Published on

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான மின்பிறப்பாக்கிகளை தேசிய கட்டமைப்புடன் இணைப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுமார் 2,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின்பிறப்பாக்கிகள் குறித்த நிறுவனங்களிடம் உள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரிலுள்ள 10 இடங்களில் மாத்திரம் 60 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின் உற்பத்தி இயந்திரங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் மின்சார நெருக்கடி, வழமைக்கு திரும்பும் வரை குறித்த மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சங்குப்பிட்டி பாலத்தின் ஊடாக கனரக வாகனங்கள் பயணிக்க தடை

யாழ்ப்பாணம் - சங்குப்பிட்டி பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரத் திருத்தப்பணிகள் காரணமாக எதிர்வரும் 3 நாட்களுக்கு குறித்த பாலத்தினூடாக...

தேயிலை ஏற்றுமதி மூலம் 942.3 மில்லியன் டொலர் வருமானம்

2024 ஆண்டின் முதல் 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 8.3 வீதத்தால் அதிகரித்துள்ளது. வருடத்தின் முதல் 8 மாதங்களில்...

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.2,000 கொடுக்க வேண்டும்”

தற்போதைய ஜனாதிபதி அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும்...