follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகட்டார் செல்லும் இலங்கை பணிப்பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகள்

கட்டார் செல்லும் இலங்கை பணிப்பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகள்

Published on

கட்டாருக்கு இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து வீட்டுப்பணிப்பெண்கள் பணிகளுக்கு அமர்த்தப்படும்போது அவர்களுக்கான ஆகக்கூடிய வருடாந்தக் கொடுப்பனவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கட்டாரின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

ஆட்சேர்ப்பு செலவுகளில் நியாயமற்ற அதிகரிப்புக்கு எதிரான கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக அதிகபட்ச கொடுப்பனவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீட்டுப் பணியாளர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர் சந்தையைக் கட்டுப்படுத்தமுடியும் என்று கட்டாரின் அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.

இதன்படி இலங்கையர்கள் 17ஆயிரம் ரியாலுக்கும், இந்தோனேசியர்கள் 17ஆயிரம் ரியாலுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 15ஆயிரம் ரியாலுக்கும், பங்களாதேஸியர்கள் 14ஆயிரம் ரியாலுக்கும், இந்தியர்கள் மற்றும் கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் பணியாளர்கள் 9ஆயிரம் ரியாலுக்கும் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று கட்டாரின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் அதிகாரபூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திகதிக்கு அடுத்த நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் இந்தத் தீர்மானத்தை, அனைத்து தகுதிவாய்ந்த அதிகாரிகளும் செயல்படுத்த வேண்டும் என்று கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...