அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருந்துகளுக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 16 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதனால் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.