Homeசெய்திலுணுகலை பகுதியில் ஆட்டோ விபத்து: ஓட்டுநர் பலி!

லுணுகலை பகுதியில் ஆட்டோ விபத்து: ஓட்டுநர் பலி!

லுணுகலை பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 67 வயதுடைய, கங்கசறி புற ரெந்தபொல ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை–லுணுகலை பிரதான வீதியின் ரெந்தபொல 21வது கட்டைப் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

லுணுகலை பகுதியிலிருந்து ஹொப்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி, ரெந்தபொல 21வது கட்டை வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நேரத்தில் ஓட்டுநர் மட்டுமே வண்டியில் இருந்துள்ளார்.

கடுமையாக காயமடைந்த சாரதியை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு ஹொப்டன் வைத்தியசாலைக்கு அனுப்பினர்.

அங்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துக்கான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

R.T.பசறை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular