Homeஉலகம்இஸ்ரேல், லெபனானுக்கிடையில் 3 தசாப்தங்களுக்கு பிறகு நேரடி பேச்சு!

இஸ்ரேல், லெபனானுக்கிடையில் 3 தசாப்தங்களுக்கு பிறகு நேரடி பேச்சு!

இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நேரடி பேச்சு நடைபெறவுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

34 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசவிருப்பது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த கலந்துரையாடல் நாளை (16) இடம்பெறவுள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைத்து, அமைதியை நிலைநாட்டும் முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தை அமைய உள்ளது.

குறிப்பாக, இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே நடக்கும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதே இந்த ராஜதந்திர சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் இந்த உரையாடல், மத்திய கிழக்கில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular