இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால் தமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை மதிப்பிடும் பணியை ஈரான் ஆரம்பித்துள்ளது.
ஈரானின் அரச ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன.
ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் சுமார் 270 பில்லியன் டாலர்வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
கட்டிடச் சிதைவுகள் மற்றும் தொழிற்சாலை முடக்கத்தால் ஏற்பட்ட வருமான இழப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொகை கணக்கிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைகளில் போர் சேதம் தொடர்பில் ஈரான் இழப்பீடு கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
