follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுசீனிக்கு தட்டுப்பாடு இல்லை! பதுக்கி வைத்திருப்பவர்களை தேடுகிறோம்

சீனிக்கு தட்டுப்பாடு இல்லை! பதுக்கி வைத்திருப்பவர்களை தேடுகிறோம்

Published on

சீனிக்கு சந்தையில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தேவைக்கு அதிகமான சீனி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சந்தையில் சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்பட எவ்வித பின்புலமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சந்தையில் சீனி 150 ரூபாவிற்கு விற்கப்படுவது குறித்து டெய்லி சிலோன் ஊடகவியலாளர் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பினார்.

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அளவுக்கு அதிகமாக சீனி இறக்குமதி செய்தவர்கள் தற்போது அவற்றைப் பதுக்கி வைத்திருக்கக் கூடும் என்றும் இதுகுறித்து தேடுதல் நடத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...