follow the truth

follow the truth

April, 11, 2025
Homeஉள்நாடுமேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் - ஷானி அபேசேகர

மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் – ஷானி அபேசேகர

Published on

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தமக்கு எதிராக முன்வைத்த பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

 

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு 2020 ஜூன் 16 ஆம் திகதி தனக்கு அழைப்பு கிடைத்ததாக மனுதாரர் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தான் அழைக்கப்பட்டதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் செய்த முறைப்பாட்டினை விசாரிக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் மற்றும் நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் இந்த முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.

எனவே, தமக்கு எதிராக 2020 நவம்பர் 24ஆம் திகதி சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் சட்டவிரோதமானவை எனவும் சட்ட அடிப்படையற்றவை எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், அவற்றை வலுவிழக்கச் செய்யும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு...

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப்...

இராஜகிரியவில் 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று(10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்...