ஜா-எல, பிட்டிபன பிரதேசத்தில் தமது வீடுகளுக்கு அருகாமையில் இயங்கிவரும் சேதன உரத் தொழிற்சாலையினால் தற்போது தமது வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியை ஜா-எல பிடிபன தேவாலயத்து அருகில் மறித்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.