பொகோசோ – பாடி நகரங்களுக்கு இடையே உள்ள அபியேட் என்ற இடத்தில் , மக்சாம் நிறுவனத்தின் தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருள்களை ஏற்றிச் சென்ற லாரி ஒரு மோட்டார் பைக் மீது மோதி வெடிவிபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் சுமார் 500 கட்டடங்கள் நொறுங்கியதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் தலைமை இயக்குநர் செஜி சாஜி அமெடோனு தெரிவித்துள்ளார்.
இந்த வெடிவிபத்தில் 17 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 59 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வெடிவிபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.