Homeஉலகம்ஹார்முஸ் நீரிணை விவகாரம்: ஈரான் விடுத்துள்ள அறிவிப்பு!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: ஈரான் விடுத்துள்ள அறிவிப்பு!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் நட்பு நாடுகள் தமது நாட்டுடன் முறையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ஈரான் பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.

அத்துடன், எதிரி நாடுகளால் ஈரானிய கடற்கரைகள் அல்லது தீவுகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், பாரசீக வளைகுடா பகுதி முழுவதும் முடக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அனைத்து கடல்சார் போக்குவரத்து வழிகளும் துண்டிக்கப்பட்டு, பிராந்தியம் முழுவதும் போக்குவரத்து முடக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய மோதல் சூழலுக்கு ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.

தனது கடல்சார் எல்லைகளைப் பாதுகாக்க ஈரான் எத்தகைய கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக இருக்கின்றது என்பதை அந்நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் வெளிப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular