Homeஉலகம்எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் இணக்கப்பாடு!

எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் இணக்கப்பாடு!

ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் தங்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், இரு நாடுகளும் தங்களுக்குள் தடையற்ற வர்த்தகத்தை தொடர உறுதிபூண்டுள்ளன.

இந்த உடன்படிக்கையின்படி, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் திரவ இயற்கை எரிவாயு போன்ற அத்தியாவசியத் தேவைகள் எவ்விதத் தடையுமின்றி பகிர்ந்துகொள்ளப்படும்.

மேலும், விநியோகச் சங்கிலியில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அதுகுறித்து பரஸ்பரம் ஆலோசித்து திறந்த சந்தை கொள்கையைப் பின்பற்றுவதாக இரு பிரதமர்களும் தெரிவித்துள்ளனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்தவும், தேவையற்ற ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தவிர்க்கவும் இந்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பொருளாதார செழிப்புக்காக மற்ற நாடுகளும் இத்தகைய வெளிப்படையான வர்த்தக முறையைப் பின்பற்ற வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular