கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றிரவு 11.45 அளவில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.