Homeஉள்நாடுயாழில் படகு விபத்து: இரு பக்தர்கள் பலி: மீட்பு பணி தீவிரம்!

யாழில் படகு விபத்து: இரு பக்தர்கள் பலி: மீட்பு பணி தீவிரம்!

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த படகொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா தற்போது இடம்பெற்று வருகின்றது.

இவ்விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பக்தர்கள் சென்ற படகே படகில் மூழ்கி இன்று விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். படகில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலர் பயணித்துள்ளனர். தற்போது மீட்பு பணி இடம்பெற்றுவருகின்றது.

ஐவர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமானது. இன்று (06) நற்கருணை பெருவிழா இடம்பெறுகின்றது. நாளை (07) சனிக்கிழமை தேர்த் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular