Homeஉள்நாடுரம்பொடையில் பாம்பு தீண்டி தோட்டத் தொழிலாளர் பாதிப்பு!

ரம்பொடையில் பாம்பு தீண்டி தோட்டத் தொழிலாளர் பாதிப்பு!

நுவரெலியா, ரம்பொடை, வெதமுல்ல தோட்டத்தில் தோட்டத் தொழிலாளியொருவர் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்
.
இன்று முற்பகல் 10.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

தேயிலை தோட்டத்தை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது , தேயிலைச் செடியின் அடிவாரத்தில் இருந்த விரியன் பாம்பே அவரை தீண்டியதாக தெரிய வருகிறது.

அவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.

கௌசல்யா.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular