வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார்மதுபான விற்பனையுடன் கூடிய உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் திடீரேன இடம்பெற்ற தீப்பரவல் சுமார் 4 மணிநேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இவ் தீவிபத்து சம்பவத்தினால் குறித்த மதுபானசாலையின் கட்டிடம் முழுமையாக சேதமடைந்திருந்ததுடன் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் , மதுபான போத்தல்கள் என்பன தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.
தீ விபத்திற்கான காரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.