follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா  தெரிவித்துள்ளார்.

சுகாதாரச் சட்டங்களைப் புறக்கணித்து பலர் தன்னிச்சையாகச் செயல்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் இந்த எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த மாதத்தின் ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியாக வந்த நீண்ட வார இறுதி நாட்களின் போது பலரும் பல்வேறு பொது இடங்களுக்கு சென்றிருந்தனர்.

இதன்போது அதிகளவானவர்கள் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளையும், தங்களையும் பாதுகாக்கும் வகையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...