Homeஉலகம்பங்களாதேஷின் தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்பு!

பங்களாதேஷின் தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்பு!

பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான், அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார். ஜனாதிபதி முகம்மது ஷகாபுதின் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பங்களாதேஷ் நாடாளுமன்றத்துக்கு கடந்த 12-ம் திகதிநடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 297 இடங்களில் 209 இடங்களை வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) கைப்பற்றியது.

மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அதன் தலைவரான தாரிக் ரஹ்மான் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இன்று அவர் பிரதமராக பதவியேற்றார்.

பங்களாதேஷ் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்களாதேஷ் ஜனாதிபதி முகம்மது ஷகாபுதின் அவருக்குப் பதிவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தாரிக் ரஹ்மானுடன் 25 அமைச்சர்களும், 24 இணை அமைச்சர்களும் பதவியேற்றனர். அமைச்சர்களாக பதவியேற்ற 25 பேரில், தாரிக் ரஹ்மான் உட்பட 17 பேர் புதிதாக பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. காவல்துறை, அதிபருக்கான காவல் படை, எஸ்எஸ்எஃப் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular