வென்னப்புவ – போலவத்த பரலோக அன்னை தேவாலயத்தின் கட்டட நிர்மாணப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையை ஆய்வு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் அந்த இடத்திலேயே வைத்திருப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.
தேவாலய அருட்தந்தையின் விருப்பிற்கு இணங்க குறித்த கல்லறையை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
கல்லறையிலிருந்து கிடைக்கப்பெறும் சான்றுகளின் அடிப்படையில் அது தொடர்பிலான இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.