Homeஉள்நாடுஜெனிவா கூட்டத்தொடர் 23 ஆம் திகதி ஆரம்பம்: விஜித ஹேரத் பங்கேற்பு!

ஜெனிவா கூட்டத்தொடர் 23 ஆம் திகதி ஆரம்பம்: விஜித ஹேரத் பங்கேற்பு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடரில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு இராஜதந்திரிகள் குழு பங்கேற்கவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறை போன்ற விடயங்கள் குறித்து இந்தக் குழு ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளது.

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து முழுமையான அறிக்கை இந்தக் கூட்டத்தொடரில் சமர்பிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular