Homeஉள்நாடுஅவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு எதிர்ப்பு!

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு எதிர்ப்பு!

“அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், அவசரகால சட்டத்தை இந்த அரசாங்கம் ஒடுக்குமுறைக்காக பயன்படுத்துகின்றது எனவும் குற்றஞ்சாட்டினார்.
எனினும், ரஞ்சித் மத்தும பண்டாரவின் இந்த குற்றச்சாட்டை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நிராகரித்தார்.

அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே அவசர கால சட்டம் நீடிக்கப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular