பிரதமரின் செயலாளராக கடமையாற்றிய காமினி செனரத், ஜனாதிபதியின் செயலாளராக பதவியேற்றார்.
ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்த, கலாநிதி பி.பீ.ஜயசுந்தர தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே காமினி செனரத் நியமிக்கப்பட்டார்.
அரச சேவையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியான செனரத், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை அதிகாரியாகவும் மேலதிக செயலாளராகவும் இருந்தார்.