வடக்கு கிழக்கு மக்களின் நலன் கருதி அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசியல் பேதங்களை மறந்து அந்த மக்களுக்கு நன்மைதரும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
9ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் கலந்துகொண்டு கொள்கை உரை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.