பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிர் இருபது – 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள 8 ஆவது அணியைத் தீர்மானிக்கும் ஐ.சி.சி. பொதுநலவாய தகுதிகாண் சுற்று கோலாலம்பூரில் நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.
ஐ.சி.சி. தரவரிசைப்படி முதல் 7 இடங்களுக்குள் இருந்த அவுஸ்திரேலியா, பார்படோஸ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே நேரடி தகுதிபெற்ற நிலையில் அவற்றுடன் 8ஆவது நாடாக இணையப்போகும் அணியை கோலாலம்பூர் தகுதிகாண் சுற்று தீர்மானிக்கும்.
இந்த தகுதிகாண் சுற்றில் இலங்கை, பங்களாதேஷ், கென்யா, மலேசியா, ஸ்கொட்லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் மகளிர் அணிகள் பங்குபற்றுகின்றன.