follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுகடலில் மூழ்கிய இரு மாணவர்கள் சடலங்களாக மீட்பு!

கடலில் மூழ்கிய இரு மாணவர்கள் சடலங்களாக மீட்பு!

Published on

மட்டக்களப்பு, கிரான் நாகவத்தை கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரானைச் சேர்ந்த ச. அக்சயன் வயது (16) மற்றும் ஜீ. சுஜானந்தன் வயது (16) ஆகிய மாணவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.

நேற்று முன்தினம் கிரான் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் ஒன்றாகச் இணைந்து கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளை கடல் அலையினால் மூவர் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது ஒருவர் உடனடியாக காப்பாற்றப்பட்டார். இருவர் காணமல் போயிருந்தனர். இவர்களை தேடும் பணியில் இரண்டு நாட்களாக கடற்கடையினர், கல்குடா சுழியோடிகள் அமைப்பு, மற்றும் உள்ளுர் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையிலேயே அவர்கள் நேற்று மாலை உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.2,000 கொடுக்க வேண்டும்”

தற்போதைய ஜனாதிபதி அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும்...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்கள் கொண்ட அணிக்கு சரித் அசலங்க...

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு புகையிரத சேவைகள் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இன்று (18) நடத்தப்படவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று (18)...