follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகொழும்பில் ஒரே நாளில் இரண்டு மசாஜ் நிலையங்களில் கொள்ளை!

கொழும்பில் ஒரே நாளில் இரண்டு மசாஜ் நிலையங்களில் கொள்ளை!

Published on

நேற்றிரவு கொள்ளுப்பிட்டி மற்றும் திம்பிரிகஸ்யாயவில் அமைந்துள்ள இரண்டு மசாஜ் நிலையங்களுக்குள் புகுந்த திருடர்கள் ஊழியர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் கொள்ளுப்பிட்டி மசாஜ் நிலையத்திற்கு வருகை தந்த இருவர், ஆயுதங்களை காட்டி இரண்டு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, திம்பிரிகஸ்யாயவில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு இரவு 11.00 மணியளவில் இரண்டு கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். ஊழியர்களிடமிருந்த ரூ. 35,000 மற்றும் ஒரு தங்க வளையலை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும், கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதை கொண்டு ,இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...