நேற்றிரவு கொள்ளுப்பிட்டி மற்றும் திம்பிரிகஸ்யாயவில் அமைந்துள்ள இரண்டு மசாஜ் நிலையங்களுக்குள் புகுந்த திருடர்கள் ஊழியர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் கொள்ளுப்பிட்டி மசாஜ் நிலையத்திற்கு வருகை தந்த இருவர், ஆயுதங்களை காட்டி இரண்டு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, திம்பிரிகஸ்யாயவில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு இரவு 11.00 மணியளவில் இரண்டு கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். ஊழியர்களிடமிருந்த ரூ. 35,000 மற்றும் ஒரு தங்க வளையலை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இரண்டு சந்தர்ப்பங்களிலும், கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதை கொண்டு ,இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.