follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1இந்த மாதத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் - எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில

இந்த மாதத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில

Published on

இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எரிவாயு கப்பல்கள் 3 துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது. எனினும் அதனை பெற்றுக் கொள்வதற்கு டொலர் இல்லாத பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சீனாவிடம் 300 மில்லியன் டொலர் கடன் பெற்றோம், இந்தியாவிடம் 400 மில்லியன் டொலர் கடன் பெற்றோம், பங்களாதேஷிடம் 250 மில்லியன் டொலர் கடன் பெற்றோம், எனினும் இந்த ஒன்றுமே ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் பெறுவதற்கு போதுமானதாக இல்லை.

இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு அபாயத்தைத் தவிர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் ஜனவரி மாதத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும்...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை...