follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP1ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் அவசர தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு!

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் அவசர தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு!

Published on

சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் அவசர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை 24 மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்படும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து எங்களது உறுப்பினர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாமல் உள்ளது.

சாதாரண நேர அட்டவணையை அமுல்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு ஆசன ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இறுதி தருணத்தில் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இதன்காரணமாக ரயில் பயணிகளும் ரயில் நிலைய அதிபர்களும் பாதிப்படைவதாக  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, 200க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 80 ரயில் மட்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...

மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ்...