இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் பல்லேகலை சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இம்மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஒருநாள் கிரிக்கட் தொடரில் பார்வையாளர்களை உள்வாங்குவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, பார்வையாளர்கள் போட்டி ஆரம்பிக்கும் தினத்திலிருந்து குறைந்தது 14 நாட்களுக்கு முன்னதாக கொரோனா இரண்டாவது தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே போட்டியை காண்பதற்கு மைதானத்திற்குள் அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.