இலங்கையில் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் தொடர்பில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை வழங்குவது தொடர்பாக சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை இறக்குமதி நடவடிக்கையின் போது இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய மருந்துப்பொருட்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.